Why 377A Matters

சிங்கப்பூரர்களாகிய நாம் நம்முடைய அரசாங்கம், குற்றவியல் சட்டம் (Penal Code) பிரிவு (Section) 377A-ஐ கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

அதற்கான நான்கு காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

  1. சட்டப் பிரிவு 377A நம்மை பாதுகாக்கிற நல்ல சட்டம்.

பிரிவு 377A நல்ல சட்டமாக கருதப்படுகிறது ஏனென்றால், சிங்கப்பூரின் பாதுகாப்பு மற்றும் உறுதியான செயல்பாடுகளை கொண்டிருக்கிறது. இது தீங்கு செய்யும் நடத்தையை தடைசெய்வதால் மக்களுக்கு பாதுகாப்பைத் அளிக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்படாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதனுடைய செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. பல ஆண்கள் ஓரினச்சேர்க்கை பாலியல் தீங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நபர் S377A-க்கு இணங்கி ஓரினச்சேர்க்கை நடத்தையிலிருந்து விலகும்போது, அவர் தன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்கிறார். புழக்கத்திலிருக்கிற S377A, ஓரினச்சேர்க்கை ஒரு விதிமுறையல்ல, ஆரோக்கியமானதுமல்ல என்று சமுதாயத்திற்கு அறிவிக்கிறது. இச்சட்டம் சமூக சமரசம் காரணமாக மட்டுமே செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.

  1. சட்டப் பிரிவு 377A உறுதி செய்யும் நல்ல சட்டம்.

S377A வேறு பாலினங்கள் சேர்வதை சமூக இலட்சியமாக கொண்டாடி ஆதரித்து உறுதிப்படுத்துகிற தேசிய விதிமுறையுடன் தன்னை தொடர்ந்து இணைத்துக் கொள்கிறது. இந்த இலட்சியத்திற்கு அரசு ஆதரவு தேவைப்படுகிறது. அதை தக்கவைத்துக் கொள்வதால் இன்னும் பல கொள்கைகளுக்கு நன்மை பயக்கும் விளைவுகளைத் தருகிறது மட்டுமல்லாமல் நமது அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்கான ஆரோக்கியமான சூழலையும் நாம் பராமரிக்கிறோம்.

பாலியல் வாழ்க்கை முறையை சிங்கப்பூர் (ஊடகங்கள்) வழி ஊக்குவிக்க முடியாது, ஏனெனில் அது தேசிய விழுமியங்கள் மற்றும் பொது ஒழுக்கத்திற்கு முரணானது.

  1. சட்டப் பிரிவு 377A-ன் தற்போதைய நிலைப்பாடு சரியான முடிவாகும்.

தற்போதைய நாடாளுமன்ற நிலைப்பாடு, LGBTQ நபர்கள் சிங்கப்பூரில் சுதந்திரமாக வசிக்கவும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாமல் வாழவும் அனுமதிக்கிறது. அதே நேரத்தில், அது கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது (குறிப்பாக ஓரினச்சேர்க்கை செயல்களின் அபாயங்கள் மற்றும் ஒழுக்கம் குறித்து). கருத்து வேறுபாடு என்பது பாகுபாடு அல்ல. தற்போதைய நிலையும் பல்வேறு கண்ணோட்டங்களும் நமது சமூகத்தை மேலும் பிளவுபடுத்தாமல் அமைதியான முறையில் இணைந்து வாழ்வதற்கு இடமளிக்கிறது.

  1. LGBTQ-வின் செயல்பாடு S377A-ஐ நீக்குவதால் நின்றுவிடாது.

பிரிவு 377A என்பது LGBTQ+ தொடர்புடைய காரியங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கக்கூடிய உறுதியான கொள்கை மாற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பின் முதல் தற்காப்பாய் இருக்கும். S377A ஒருவேளை ரத்து செய்யப்பட்டால், அதன் விளைவுகள் நிஜமாயிருக்கும். LGBTQ ஆர்வலர்களும் ரத்துக்கு அப்பால் முயற்சி செய்வார்கள். யோசனைகளுக்கு விளைவுகள் உண்டு, கெட்ட எண்ணங்களுக்கு பலியாகிறவர்களும் உண்டு. S337A ரத்து செய்யப்பட்டால் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் LGBTQ-வின் சித்தாந்தங்களுக்கு பலியாகிவிடுவார்கள்.

2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்திற்கு (OHCHR) செயற்பாட்டாளர்கள் அளித்த கூட்டுச் சமர்ப்பிப்புகளிலிருந்து தொகுக்கப்பட்ட முழுமையான கோரிக்கை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது [கூட்டுச் சமர்ப்பிப்புகள் 2, 3, 4 மற்றும் 6-ஐ பார்க்கவும்].

  • விரிவான பாலியல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துதல் (பள்ளிகளில் LGBT-யை இயல்பாக்குகிறது)
  • மாநில சுகாதார மானியங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஆரோக்கிய பராமரிப்புக்கான நிதி உதவியை நீட்டிக்கவும் (அதாவது மாற்றம்), மற்றும் ஒரே பாலின கூட்டுறவில் உள்ள LGBT நபர்களுக்கான பாதுகாப்பு
  • சிங்கப்பூரில் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க அல்லது அனுமதிக்க.
  • மனநலப் பராமரிப்பு மற்றும் சமூக சேவை நிபுணர்களுக்கான உணர்திறன் பயிற்சி அளிக்க “உறுதிப்படுத்த மட்டும்” ஆதரவு
  • உதவி இனப்பெருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த LGBT நபர்களை அனுமதிக்கவும் (IVF பயன்படுத்தும் விந்து நன்கொடையாளர்கள், வாடகைத்தாய் போன்றவை)
  • வீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களில் ஒரே பாலின கூட்டாண்மைகளை அங்கீகரிக்க
  • ஒரே பாலின கூட்டுறவில் உள்ளவர்களுக்கு சொத்துக்களைப் பெற உரிமை இல்லாததால் முஸ்லீம் சட்ட நிர்வாகம் (AMLA) மற்றும் பரம்பரைச் சட்டங்களைத் திருத்த
  • சட்டப்பூர்வமான பாலின மாற்றத்தை சட்டப்பூர்வ அறிவிப்பின் மூலம் அனுமதிக்க (சட்டப்பூர்வமான பாலின மாற்றத்திற்கு முன் பாலின மாற்று அறுவை சிகிச்சையும் அடங்கும்)
  • அடையாள அட்டை/பாஸ்போர்ட்-இல் ஒருவரின் பாலின அடையாளத்தை அகற்றுவதற்கான விருப்பத்தை வழங்கவும்
  • அனைத்து வகையான ‘மாற்று சிகிச்சைகளைத்’ தடை செய்ய (LGBT-ஐ கண்மூடித்தனமாக உறுதிப்படுத்தும் சிகிச்சைக்கான விருப்பங்களை நீக்குகிறது. (e.g LGBT மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை ஊக்கப்படுத்தும் பிரார்த்தனைகள் அல்லது ஆலோசனைகள் இல்லாமை.)

2018-ல் நடைபெற்ற “ரத்து செய்ய தயார்” நகர மண்டபத்தில், ஆர்வலர்கள் S377A-ஐ ரத்து செய்ய வலியுறுத்துவதை நிறுத்த மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர். சிங்கப்பூரின் மேல் அக்கறையுள்ள குடிமக்களாகிய நாங்கள், LGBTQ ஆர்வலர்கள் S377A-ஐ ரத்து செய்ய முன்வைத்த காரணமும், பிற சட்ட மாற்றங்களுக்கு அவர்கள் முன்வைத்த காரணமும் இறுதியில் ஒன்றாக தான் இருக்கும் என்று கவனிக்கிறோம் – ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது போன்றது.

மேற்குறிப்பிட்ட கருத்தில், குற்றவியல் சட்டப் பிரிவு 377A-ஐ முழுமையாகத் தக்க வைத்துக்கொள்ளுமாறு அரசாங்கத்தை நாங்கள் மனப்பூர்வமாகவும் பணிவாகவும் கேட்டுக்கொள்கிறோம். அதே நேரத்தில், தேசிய விழுமியங்கள் மற்றும் பொது ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் தேசிய கல்வியை மேலும் வலுப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நன்றி

– சம்பந்தப்பட்ட சிங்கப்பூரர்கள்

Protect S377A

We are concerned Singaporeans who want our Government to keep Section 377A of the Penal Code.

Protect S377A

22,749 signatures

Please sign only once. Entries will be matched via details submitted. Multiple entires will not be counted.
Please note that your details (e.g name, last 4 digits of NRIC) may be included in a letter to the Ministry of Home Affairs.

PDPA Clause

We collect, use and disclose personal data in accordance with the Personal Data Protection Act.

By submitting this form, you agree to the collection, use and disclosure of your personal data by Protect 377A.SG, its representatives or their duly authorised persons for the purposes of verifying and authenticating your responses, giving updates on the status of the letter, submission of the letter to the relevant authorities in Singapore, and any other purpose reasonably connected with this letter.